திண்டுக்கல் மாவட்டம் பொருந்தலாறு அணையில் இருந்து வரும் 20 -ஆம் தேதி முதல் நீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
திண்டுக்கல் மாவட்டம் பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்துஸ தாடாகுளம் முதல் போக பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை ஏற்று, வரும் 20 -ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன். இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.