திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக கூறி, ரூ.4.16 லட்சம் மோசடி செய்ததாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது அளிக்கப்பட்ட புகார் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை புது வண்ணாரப்பேட்டை, அன்னை இந்திராகாந்தி நகரைச்சேர்ந்தவர் தயாநிதி ( 24). இவர் புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ஒரு புகார் மனு அளித்தார். அதில், 'நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், என்னை திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி ரூ. 4.16 லட்சம் வாங்கினார். ஆனால், இதுவரை எனக்கு எந்த திரைப்பட வாய்ப்பையும் அவர் பெற்று தரவில்லை. மேலும், நேரில் சென்றாலும் அவரைப் பார்க்க முடியவில்லை. பணத்தையும் திருப்பி தராமல் இழுத்தடித்து வருகிறார். பவர் ஸ்டார் சீனிவாசனிடமிருந்து எனக்குச் சேர வேண்டிய பணத்தை பெற்றுத்தர வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.