அக்டோபர் 27-இல் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் பேச்சுப் போட்டி சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரியில் வரும் 27-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு

கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் பேச்சுப் போட்டி சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரியில் வரும் 27-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.
மத்திய சென்னை மாவட்ட அரிமா சங்கம் சார்பில் 47-ஆவது ஆண்டாக தொடர்ந்து கல்லூரிகளுக்கு இடையே இந்த பேச்சுப் போட்டி நடத்தப்படுகிறது. தொடக்க நிலையில் வரும் 27-ஆம் தேதி நடத்தப்படும் போட்டியில் ஆறு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அடுத்த நான்கு நாள்களுக்குள் இறுதி பேச்சுப் போட்டி நடத்தப்படும்.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), மெட்ரோ ரயில் போக்குவரத்தின் அவசியம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்படுத்திய தாக்கங்கள், ஊடகங்களின் சமூக பொறுப்புணர்வு, லஞ்சம் இல்லாத சமுதாயத்தை எவ்வாறு உருவாக்குவது ஆகியவை உள்பட பல்வேறு தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடைபெறும். இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் கல்லூரிகளுக்கு கோப்பைகள், மாணவர்களுக்கு பதக்கங்கள்-ரொக்கப் பரிசுகள், பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இது குறித்து மேலும் தகவல் பெறவும், முன்பதிவு செய்யவும் rfpc.anbarasan@yahoo.com,  snhari818@gmail.com, murugaanand.ra@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகள், 98408 18802, 9003133233 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.lionsclubofcentralmadras.org என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com