கூடலூருக்குள் புகுந்த கட மான்: போராடிப் பிடித்த பொதுமக்கள்

தேனி மாவட்டம் கூடலூரில் செவ்வாய்க்கிழமை வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த கட மானை, பொதுமக்கள் 4 மணி நேரம் போராடிப் பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கூடலூர் பகுதியில் பிடிபட்ட, வனத்திலிருந்து வழி தவறிய கட மான்.
கூடலூர் பகுதியில் பிடிபட்ட, வனத்திலிருந்து வழி தவறிய கட மான்.

தேனி மாவட்டம் கூடலூரில் செவ்வாய்க்கிழமை வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த கட மானை, பொதுமக்கள் 4 மணி நேரம் போராடிப் பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு காவல் நிலையம் அருகே கம்பம் செல்லும் பிரதான சாலையில் தனியாருக்கு சொந்தமான திரையரங்கு உள்ளது. இது பல ஆண்டுகளாக செயல்படவில்லை. செவ்வாய்க்கிழமை மதியம் சுமார் 1 மணியளவில் மேற்கே உள்ள வனப்பகுதியிலிருந்து வழி தவறி வந்த மான் மூடப்பட்ட திரையரங்க வளாகத்திற்குள் புகுந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அங்கு வேடிக்கை பார்க்கத் திரண்டனர். கூட்டத்தை பார்த்ததும் மான் மிரண்டு அங்கும், இங்கும் ஓடியது. தகவலறிந்த கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீஸார் கம்பத்தில் உள்ள மேகமலை வனச் சரணாலய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். 
விரைந்து வந்த வனத்துறையினர், மானை பிடிக்க வலை இல்லாமல் திண்டாடினர். பின்னர் கம்பம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அவர்கள் மானை பிடிக்க வலை இல்லை என்று கையை விரித்து விட்டனர். குழம்பிய நிலையிலிருந்த வனத்துறையினருக்கு பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் உதவ முன் வந்தனர். 4 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் கயிறு மூலம் மானைப் பிடித்து, கம்பத்தில் உள்ள வனச்சரணாலய அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பிடிபட்ட மான் கடமான் வகையை சேர்ந்த 7 வயதுள்ள ஆண் மான் எனத் தெரிய வந்தது. பலத்த காயமடைந்திருந்த மானுக்கு கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு, சுருளி அருவி வனப்பகுதியில் விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com