கோவை வருமான வரித் துறை அலுவலகத்தில் துணை ஆணையராகப் பணியாற்றி வந்த எஸ்.சிவகுமார் மாயமானது தொடர்பாக, அவரது செல்லிடப்பேசி அழைப்புக்களைக் கொண்டு தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை, பீளமேடு, கெüதமபுரி நகரில் வசித்து வருபவர் எஸ்.சிவகுமார் (38). இவர் கடந்த 2008}ஆம் ஆண்டு ஐ.ஆர்.எஸ். படிப்பை முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து,கோவை வருமான வரித் துறை அலுவலகத்தில் துணை ஆணையராகப் பணியாற்றி வருகிறார்.
கடந்த அக்டோபர் 12}ஆம் தேதி இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.அப்போது அவரது உறவினர்கள் இருவரையும் சமரசம் செய்து வைத்துள்ளனர். இதனிடையே, அக்டோபர் 13}ஆம் தேதி இரவு 1 மணியளவில் வெளியே சென்ற சிவகுமார் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது தம்பி ராம்குமார், பீளமேடு காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்துள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தும்படி மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து, உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் மற்றும் 2 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தனிப்படையினர் அவரது செல்லிடப்பேசி அழைப்புகளைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகுமார் மன அமைதியைச் தேடி வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்றுள்ளாரா என்பது குறித்து அவரது புகைப்படத்துடன் கூடிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.