ஆம்பூர் அருகே கால்வாய் தூர்வாரிய போது 11 அடி நீள மலைப் பாம்பு சனிக்கிழமை பிடிபட்டது.
நரியம்பட்டு அருகே பனங்காட்டூர், நரியம்பட்டு, அயித்தம்பட்டு வழியாக பெரியவரிகம் ஏரிக்கு கால்வாய் செல்கிறது. நரியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே பொக்லைன இயந்திரம் மூலம் தூர்வாரும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
அப்போது, 11 அடி நீளமுள்ள மலைப் பாம்பு ஊர்ந்து செல்வதைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள் உடனடியாக வனத் துறைக்கு தகவல் அளித்தனர்.
பின்னர், அங்கு வந்த வனவர் கருணாமூர்த்தி, வனக்காப்பாளர் காந்தராஜ் ஆகியோர் இளைஞர்கள் உதவியுடன் மலைப் பாம்பைப் பிடித்தனர். பிடிபட்ட மலைப்பாம்பை துருகம் காப்புக் காட்டில் விட்டனர்.