சென்னை: அனைத்து போக்குவரத்துக் கழக மற்றும் பணிமனை கட்டடங்களின் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொறையார் பணிமனை விபத்து தொடர்பாக போக்குவரத்துத் துறை பதில் தரவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் நிவாரண தொகை வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், காயமடைந்தவர்களுக்கு அரசு சார்பில் இலவச சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
பொறையார் பணிமனை கட்டடம் இடிந்து விழுந்த விபத்து குறித்து தானே முன்வந்து விசாரித்த வழக்கில் உயர் நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக வழக்குரைஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் முறையிட்டதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு ஏற்றது.
இந்த சம்பவம் தொடர்பாக நாளிதழ்களில் வந்த செய்திகளையும் சாட்சிகளாக வைத்துக் கொள்ளவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
20ம் தேதி பொறையார் போக்குவரத்துக் கழக பணிமனை கட்டடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.