மருதுபாண்டியர்களின் 216 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை உள்பட 5 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க. லதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மருதுபாண்டியர்களின் 216ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள அவர்களது நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதையடுத்து, சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிவகங்கை, காளையார்கோவில்,திருப்பத்தூர், மானாமதுரை, திருப்புவனம் ஆகிய 5 ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.