ரேஷன் அட்டை முகவரி மாற்றம், பெயர் சேர்ப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள சென்னையில் 17 இடங்களில் சிறப்பு முகாம் சனிக்கிழமை (செப். 9) நடைபெறுகிறது.
இது குறித்து தமிழக அரசின் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் சென்னையில் 17 மண்டலப் பகுதிகளில் இந்த மாதத்துக்கான குறைதீர் கூட்ட முகாம் நடைபெறவுள்ளது.
அந்தந்த மண்டல உதவி ஆணையாளர் அலுவலகத்திலேயே காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும்.
இதில், குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம், பொது விநியோகத் திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும், பொது விநியோகத் திட்ட பொருள்கள் கிடைப்பது பற்றியும் புகார்களைத் தெரிவிக்கலாம்.