சசிகலாவின் கணவர் நடராஜன் நுரையீரல் பிரச்னை தொடர்பாக மருத்துவமனையில் அனுமதி

சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக
சசிகலாவின் கணவர் நடராஜன் நுரையீரல் பிரச்னை தொடர்பாக மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனுக்கு, நுரையீரல் அறுவை சிகிச்சை வேண்டும் என மருத்துவர்கள் தெதிவித்துள்ளனர். மேலும், அதற்காக லண்டனில் இருந்து மருத்துவர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டொரு தினங்களில் அறுவைசிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதையடுத்து தனது மனைவி சசிகலாவை பார்க்க வேண்டும் என்று நடராஜன் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, தனது கணவர் நடராஜனை சந்திக்க வருவரா என்பது நாளை தினம் தெரிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நாளை சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திப்பதற்காக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் பெங்களூரு செல்ல உள்ளதாகவும், அப்போது அதிமுக கட்சி மற்றும் ஆளும் அரசின் நிலைகள் குறித்தும், தங்களின் நிலை குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

செப்டம்பர் 12-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் கணவரை காண சசிகலா பரோலில் வருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com