ஜாக்டோ-ஜியோ போராட்டம் எதிரொலி: மருத்துவ விடுப்பு எடுக்க அரசு ஊழியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு

ஜாக்டோ -ஜியோ சங்கத்தைச் சேர்ந்தவர்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்புகளை எடுப்பதற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஜாக்டோ -ஜியோ சங்கத்தைச் சேர்ந்தவர்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்புகளை எடுப்பதற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஒருபிரிவினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்கள் திங்கள்கிழமை முதல் பணிக்குச் செல்லாமல் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
திடீர் கட்டுப்பாடுகள்: ஜாக்டோ -ஜியோ போராட்டம் தொடங்கிய நாளில் இருந்தே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. சாதாரண விடுப்புகளை எடுக்கக்கூடாது என்று முதலில் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஜாக்டோ -ஜியோ அமைப்பின் ஒருபகுதியினர் திங்கள்கிழமை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பதில் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
போராட்டக் காலம் முடிவடையும் வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்புகள் எதுவும் கோரக் கூடாது. மேலும், மருத்துவ விடுப்புகளுக்கு உடனடியாக அனுமதி தரப்படமாட்டாது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மருத்துவ விடுப்பு தொடர்பான விண்ணப்பங்கள் மருத்துவக் குழுவுக்கு அனுப்பப்படும். குழு பரிசீலித்து விடுப்பு அளிக்கலாம் என ஒப்புதல் கொடுத்த பிறகே மருத்துவ விடுப்புக்கு அனுமதி தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

1.25 லட்சம் பேர்


போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் யார் யார் என்பது குறித்து தமிழக அரசால் கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. திங்கள்கிழமை பணி வருகை பதிவேட்டில் கையெழுத்திடாத அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை 1.25 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. மேலும், அவர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com