சிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த திருவள்ளூர் டிஎஸ்பி காதர் பாஷா கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் அவரை நேற்று கும்பகோணத்தில் கைது செய்தனர். இதையடுத்து அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
கைதான திருவள்ளூர் டிஎஸ்பி காதர் பாட்ஷா மீது 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இவ்வழக்கில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்புராஜ் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.