போராட்டத்தைக் கைவிட்டால் பேச்சுவார்த்தை: ஜாக்டோ ஜியோ அமைப்புக்கு நீதிமன்றம் ஆணை

போராட்டத்தை முடித்துக் கொண்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று ஜாக்டோ - ஜியோ அமைப்புக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
போராட்டத்தைக் கைவிட்டால் பேச்சுவார்த்தை: ஜாக்டோ ஜியோ அமைப்புக்கு நீதிமன்றம் ஆணை


மதுரை:  போராட்டத்தை முடித்துக் கொண்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று ஜாக்டோ - ஜியோ அமைப்புக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நடத்தி வரும் போராட்டம் குறித்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்திருக்கும் உத்தரவில், எந்த நிபந்தனையும் வைக்காமல் உடனடியாக போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பினால் வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும். தலைமைச் செயலரை நேரில் அழைத்து பேச்சுவார்த்தைக நடத்தத் தயார் என்று கூறினார்.

மேலும், அரசு ஊழியர்களின் குறைகளைத் தீர்க்க எத்தனையோ வழி இருக்கிறதே? உங்கள் பிரச்னைகளுக்காக நீதிமன்றத்தை நாடாமல் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? காலாண்டுத் தேர்வு நடக்கும் போது ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பது மாணவர்களை பாதிக்காதா? என்று கேள்விகளையும் எழுப்பினர்.

மேலும், போராட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ள நீதிமன்றம், போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து முடிவெடுத்து நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com