திருவண்ணாமலை ஆட்சியரை தாக்க முயற்சி: மூவர் கைது

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியை தாக்க முயன்றதாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியை தாக்க முயன்றதாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வெள்ளிக்கிழமை பிற்பகல் தனது குடியிருப்பு எதிரே நடை பயிற்சி மேற்கொண்டார். பின்னர், குடியிருப்பு உள்ளே சென்றபோது, பைக்கில் அங்கு வந்த 3 பேர் ரகளையில் ஈடுபட்டனராம்.
இதைத் தட்டிக் கேட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியை மூவரும் தாக்க முயன்றனராம். இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரும், ஆட்சியர் குடியிருப்பு அலுவலக ஊழியர்களும் மூவரையும் தடுத்து நிறுத்திப் பிடித்தனர். இதுகுறித்து, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து மூவரையும் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், மூவரும் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், மணிகண்டன், சிவா என்பது தெரியவந்தது. மது போதையில் இருந்த அவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 
ஆட்சியரை தாக்க முயன்றது ஏன் என்பது குறித்து போலீஸார் அவர்களிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com