மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நொடிக்கு 4 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது.
காவிரியில் நடத்தப்படும் மகா புஷ்கர விழாவுக்காக கடந்த 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து நொடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
மூன்று நாள்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை இரவு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நொடிக்கு 4 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76.95 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 6,847 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து நொடிக்கு 4 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 38.98 டி.எம்.சி.