அதிமுக ஆட்சியை 30 ஆண்டுகள் ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாது என்றார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம்.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
அதிமுக ஆட்சியை இந்த மூன்று ஆண்டுகள் மட்டுமல்ல, 30 ஆண்டுகள் ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க சொன்னார்கள். அதன்படி அமைத்தாகிவிட்டது.
விசாரணை கமிஷன் அறிக்கை வந்த பிறகு என்ன நடந்தது என்பது மக்களுக்குத் தெரிய வரும். விசாரணை கமிஷன் என்ன தீர்ப்பு சொல்கிறதோ, அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் வைத்திலிங்கம்.