பாவம் செய்தவர்கள் நதியில் மூழ்கினால் நதிதான் மாசுபடும் என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி மகா புஷ்கரம் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் புனித நீராடினார்.
இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன்,
ஜெயலலிதா இருந்திருந்தால் அனிதாவுக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கும். துரோகத்தை போக்க எந்த நதியில் மூழ்கினாலும் பாவம் போகாது.
பாவம் செய்தவர்கள் நதியில் மூழ்கினால் நதிதான் மாசுபடும். இவ்வாறு அவர் கூறினார்.