தமிழகத்தின் முன்னணி தொழில் நிறுவனமான முருகப்பா குழுமத்தின் நிறுவனர் எம்.வி.முருகப்பன்(81) செவ்வாய்க்கிழமை (செப். 19) இரவு காலமானார். அவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர்.
கட்டுமானத் தொழில், உரம், சிமெண்ட், சைக்கிள் உள்பட பல்வேறு தொழில் துறைகளில் கால் பதித்து முன்னணி தொழிலதிபராக திகழ்ந்தவர். சென்னை தொழில் வர்த்தக சபைத் தலைவர், இந்திய தொழில் மற்றும் வர்த்தகர் சபை கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.
அவரது இறுதிச்சடங்கு திருவொற்றியூரில் உள்ள மயானத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. அவரது மறைவு, தொழில் உலகுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் என முக்கிய தொழில் பிரபலங்கள் தங்களது இரங்கல் செய்தி தெரிவித்துள்ளனர்.