18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தை ரத்து செய்ய கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற முதன்மை அமர்வில் விசாரணையில் உள்ளதாகக் கூறி வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.