சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தினகரன் அணியைச் சேர்ந்த தென்காசி தொகுதி அதிமுக மக்களவை உறுப்பினர் வசந்தி முருகேசன் இன்று முதல்வர் கே.பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
மக்களவை உறுப்பினர் வசந்தி முருகேசன் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு முதல்வர் கே. பழனிசாமிக்கு தனது ஆதரவை அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.