பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதகாலம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளன் ஒரு மாதகால பரோலில் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி வெளிவந்தார். இந்த பரோலின் காலம் நாளையுடன் முடியும் நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாத நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்நிலையில் இன்று பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது முகநூல் பதிவில்,
பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதகாலம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அவருக்கு பரோலை நீடிக்க வேண்டும் என்பது மட்டும் அல்ல, அவரையும் மற்றவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது திமுக வின் கோரிக்கை. ஆகவே, நீண்டகாலமாக சிறையில் இருக்கும் அவர்களின் விடுதலை குறித்து தமிழக அரசும், மத்திய அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.