சென்னை: சென்னை மாநகரப் பேருந்து தாறுமாறாக ஓடி சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
கண்ணகி நகரில் இருந்து பிராட்வே சென்ற பேருந்து பாரிமுனை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் மாநகரப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடி சுரங்கப்பாதையின் சுவரில் மோதியது.
இதில், பேருந்தில் இருந்த 10 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் பதற்றமும் நிலவி உள்ளது.