துணைவேந்தர் நியமனம்: ஏப்.20 -இல் தேமுதிக கண்டன பேரணி

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி, தேமுதிக சார்பில் வெள்ளிக்கிழமை (ஏப்.20) கண்டனப் பேரணி நடத்தப்பட உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி, தேமுதிக சார்பில் வெள்ளிக்கிழமை (ஏப்.20) கண்டனப் பேரணி நடத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக தேமுதிக தலைமை திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் சூரப்பா நியமிக்கப்பட்டதைத் திரும்பப்பெற தேமுதிக சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்காவிட்டால் புதன்கிழமை (ஏப்.18) காலை 11 மணியளவில் ஆளுநர் மாளிகை நோக்கி தேமுதிக சார்பில் கண்டனப் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
ஆனால், அந்த தேதியில் போலீஸ் அனுமதி கிடைக்காததைத் தொடர்ந்து, கண்டனப் பேரணி நடத்துவது வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 10 மணியளவில், சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி கண்டனப் பேரணி நடத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com