அரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடத்துக்கு பதவி உயர்வு, பணி மாறுதல் கலந்தாய்வு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்தப் பதவிக்கு தகுதியுள்ள ஆசிரியர்கள் தாம் பணிபுரியும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் காலை 9 மணியளவில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்பர். இணையதளம் மூலம் அவரவர் விருப்பத்துக்கேற்ப பணியிடங்களைத் தேர்வு செய்து பதவி உயர்வு, பணி மாறுதல் ஆணையை அவர்கள் பெறுவர் என பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வரமுருகன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.