காவேரி மருத்துவமனைக்கு உள்ளும் வெளியும் கண்ணீர் 

காவேரி மருத்துவமனைக்கு உள்ளும் வெளியும் கண்ணீர் 

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள பின்னடைவின் காணமாக காவேரி மருத்துவமனைக்கு உள்ளும் வெளியும் கண்ணீரால் நிரம்பியுள்ளது.

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள பின்னடைவின் காணமாக காவேரி மருத்துவமனைக்கு உள்ளும் வெளியும் கண்ணீரால் நிரம்பியுள்ளது.

திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையானது மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மாலை 04.30 மணியளவில் காவிரி மருத்துவமனை தரப்பில் இருந்து மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக காவேரி மருத்துவமனைக்கு உள்ளும் வெளியும் தொண்டர்கள் மற்றும் திமுகவினரின் கண்ணீரால் நிரம்பியுள்ளது.  

சற்று முன்பு திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் கண்களில் நீருடன் காவேரி மருத்துவமனைக்குள் செல்கின்றனர்.

அதே நேரம் திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும், கருணாநிதியின் மருமகளான மோகனா தமிழரசு ஆகியோர் கண்ணீர் வழிய மருத்துவமனைக்குள் சென்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com