சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள வி.கே.தஹில்ரமணி வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.12) பதவியேற்கிறார்.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் அன்றைய தினம் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, அவர் அண்மையில் பொறுப்பேற்றார். அவருக்குப் பதிலாக மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக (பொறுப்பு) வகித்து வந்த வி.கே.தஹில்ரமணியை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக அண்மையில் மத்திய சட்ட அமைச்சகம் நியமனம் செய்து அறிவிக்கை வெளியிட்டது.