தமிழக எல்லையோர கேரளப் பகுதியில் கன மழை

கூடலூரை அடுத்துள்ள கேரள மாநில எல்லையோரப் பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
தமிழக எல்லையோர கேரளப் பகுதியில் கன மழை

கூடலூரை அடுத்துள்ள கேரள மாநில எல்லையோரப் பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள கேரள மாநிலத்தின் வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாகத் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. 
இதனால், இப்பகுதியில் இருமாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துத் தடைப்பட்டுள்ளது. இங்கு,  தமிழக, கேரள எல்லையோரப் பகுதி மலைப் பிரதேசம் என்பதால் நிலச் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. 
கேரள எல்லைக்குள் பல இடங்களில் நிலச் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. சாலைகளில் மரங்களும், பாறைகளும் விழுந்து கிடக்கின்றன. 
தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com