கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மூத்த மகன் மு.க. முத்து அஞ்சலி 

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மூத்த மகன் மு.க. முத்து ஞாயிறன்று முதன்முறையாக அஞ்சலி செலுத்தினார்.
கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மூத்த மகன் மு.க. முத்து அஞ்சலி 

சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மூத்த மகன் மு.க. முத்து ஞாயிறன்று முதன்முறையாக அஞ்சலி செலுத்தினார்.

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் கடந்த செவ்வாய் மாலை 06.10 மணியளவில் மரணமடைந்தார். பின்னர் புதனன்று அவரது உடல் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதி வளாகத்தின் உள்ளே நல்லடக்கம் செய்ப்பட்டது.

இந்நிலையில் கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மூத்த மகன் மு.க. முத்து ஞாயிறன்று முதன்முறையாக அஞ்சலி செலுத்தினார். 

மு.க.முத்துவுடன் அவரது குடும்பத்தினரும் உடன் வந்து இருந்தனர். கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் மகன் மு.க. முத்து என்பது குறிப்பிடத்தக்கது.  சமீபகாலமாக உடல்நலக் குறைவின் காரணமாக வெளியே எங்கும் செல்லாமல் இருந்த அவர், தற்போது தனது தந்தை கருணாநிதியின் நினைவிடத்திற்கு முதன்முறையாக வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார் எண்பது கவனிக்கத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com