தேக்கடி மற்றும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக முல்லை பெரியாறு அணை 3 ஆண்டுகளுக்கு பிறகு 142 அடியை எட்டி உள்ளது. அணையின் மொத்த உயரமான 152 அடியில் 142 அடி வரை தண்ணீர் தேக்க உச்ச நீதிமன்ற அனுமதி உள்ளது.
அணைக்கு விநாடிக்கு 16,629 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 2,200 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணையின் 13 மதகுகள் திறக்கப்பட்டு விநாடிக்கு 11,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.