பி.இ. துணைக் கலந்தாய்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பி.இ. துணைக் கலந்தாய்வில் பங்கேற்க வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


பி.இ. துணைக் கலந்தாய்வில் பங்கேற்க வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்து, சிறப்புத் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு முடிவில் காலியாக இருக்கும் பொறியியல் இடங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவர். இதற்கு வியாழக்கிழமை முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20 கடைசி நாளாகும்.
இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்சிஏ, எஸ்.டி. பிரிவினர் ரூ. 250 கட்டணம் செலுத்தினால் போதுமானது. கட்டணத்தை கடன் அட்டை, பற்று அட்டைகள் மூலமாக ஆன்-லைனிலேயே செலுத்தலாம் அல்லது வரைவோலையாக எடுத்து, அருகில் உள்ள கலந்தாய்வு உதவி மையத்தில் செலுத்தலாம்.
சென்னை மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு: துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலந்தாய்வு உதவி மையத்தில் மட்டுமே அசல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். கொண்டுவரவேண்டிய சான்றிதழ்கள் உள்ளிட்ட விவரங்களை www.annauniv.edu http://tnea.ac.in ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். சந்தேகங்களை 044 - 2235 9901 - 20 தொலைபேசி எண்களையும், 18004259779 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் தொடர்புகொண்டு தெளிவு பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com