வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,
கட்சி பாகுபாடின்றி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு உதவுகிறது. பாஜக ஆளும் மாநிலம், ஆளாத மாநிலம் என்றில்லாமல் மத்திய அரசு உதவி வருகிறது. பாதிப்பு ஏன் ஏற்பட்டது என கேரள அரசு கவனிக்க வேண்டும்.
இயற்கை பாதிப்புகளை யாரும் கணித்து செயல்பட முடியாது. ஆனால் எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டியது அரசின் கடமை. எனவே எந்த நாடாக இருந்தாலும் பாதிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.