புதுச்சேரி: வாக்குப்பதிவு முடிந்துள்ள 5 மாநில பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் ஆட்சியை பிடிக்கும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலரும், புதுவை காங்கிரஸ் பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக் தெரிவித்தார்.
புதுச்சேரியில் முகுல் வாஸ்னிக் செய்தியாளா்களிடம் கூறுகையில், 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்திற்கு சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு செல்லும் இடங்களில் எல்லாம் அதிகமான மக்கள் கூடி வந்து ஆதரவு அளித்தனர். மக்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
எனவே நாங்களும் மிகவும் நம்பிக்கையாக உள்ளோம். டிச.11-ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் நிச்சயமாக 4 மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம் என்றார்.
மேலும், கர்நாடக மாநிலத்தில் மேக்கேதாட்டு அணை விவகாரம் இரு மாநிலங்களுக்கு இடையிலானது. இதை மாநில அளவில் தான் பேசி முடிவு எடுக்க வேண்டும். அப்பிரச்னைக்கு மாநில தலைவர் பதில் அளிப்பார் என்றார் முகுல் வாஸ்னிக்.