சென்னை: மாணவர்களின் வருகையைப் பதிவு செய்யும் ஃபேஸ் ரீடிங் முறையை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை அசோக்நகரில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் ஃபேஸ் ரீடிங் முறையை அமைச்சர் தொடங்கி வைத்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, மாணவர்களின் வருகையைப் பதிவு செய்ய, இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் "பேஸ் ரீடிங் முறை" கொண்டு வரப்பட்டுள்ளது. இது படிப்படியாக அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார்.