ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா வீட்டின் பணிப்பெண்கள் ஆஜராகியுள்ளனர்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா, சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு, அப்பல்லோ மருத்துவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
இந்நிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா வீட்டின் பணிப்பெண்கள் இன்று ஆஜராகியுள்ளனர். தஞ்சவூரை சேர்ந்த தேவிகா, பூமிகா, சிவயோகம் ஆகிய மூவரும் போயஸ் கார்டனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பணிப்பெண்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.