மதுரை: இனி அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால்தான் அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற முடியும் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் ஞாயிறன்று அதிமுக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:
இனி அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால்தான் அரசு உதவிகள் பெற முடியும். காவிரி விவகாரத்தினைப் பொறுத்த வரை உரிய நடவடிக்கையினை விரைந்து எடுக்குமாறு கோரி பிரதமரிடம், முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை வைப்பார். காவிரி விவகாரத்தில் அதிமுக அரசு தொடர்ந்து இறுதிவரை போராடும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.