வேலூர் மாவட்டம், ஆற்காடு ஒன்றியம், தென்னந்தியாலம் கிராமத்தைச் சேர்ந்த வரதனின் மகன் வி.முருகேசன் (70), உடல் நலக்குறைவால் புதன்கிழமை காலமானார். இவருக்கு ஒரு மகன், 5 மகள்கள் உள்ளனர். இவரது மருமகன் எஸ்.சிலம்பரசன் தினமணி சென்னைப் பதிப்பில் பக்க வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். முருகேசனின் இறுதிச் சடங்கு ஆற்காடு பாலாற்றங்கரையில் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது.
தொடர்புக்கு: 9894293259.