துணைவேந்தர் கணபதியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு ஒத்திவைப்பு

துணைவேந்தர் கணபதியை போலீஸ் காவலில் எடுக்கக் கோரிய மனு பிப்ரவரி 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
துணைவேந்தர் கணபதியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு ஒத்திவைப்பு

துணைவேந்தர் கணபதியை போலீஸ் காவலில் எடுக்கக் கோரிய மனு பிப்ரவரி 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆ.கணபதி (67), பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் டி.சுரேஷ் (41) என்பவரிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை அதிகாரிகளால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

அவருடன், வேதியியல் துறை பேராசிரியர் என்.தர்மராஜூம் கைது செய்யப்பட்டார். தனது தகுதிகாண் பருவத்தை நிறைவு செய்வதற்காகத் துணைவேந்தர் ரூ.30 லட்சம் கேட்பதாக டி.சுரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் சுமார் 12 மணி நேர விசாரணைக்குப் பிறகு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதனிடையே துணைவேந்தர் கணபதியை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் கோவை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த கோவை நீதிமன்ற நீதிபதி விசாரணையை பிப்ரவரி 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். 

முன்னதாக நேற்று கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை கோவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com