பரோல் வழங்கினால் ரவிச்சந்திரன் உயிருக்கு ஆபத்து: சிறைத்துறை பதில் மனு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பரோல் வழங்கினால் ரவிச்சந்திரன் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று சிறைத்துறை தெரிவித்துள்ளது. 
பரோல் வழங்கினால் ரவிச்சந்திரன் உயிருக்கு ஆபத்து: சிறைத்துறை பதில் மனு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பரோல் வழங்கினால் ரவிச்சந்திரன் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று சிறைத்துறை தெரிவித்துள்ளது. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனை ஒரு மாத கால பரோலில் அனுப்ப உத்தரவிடக் கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி உயர்
நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்திருந்தார். இவ்வழக்கில் இன்று சிறைத்துறை சார்பில் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அதில், ராஜீவ் கொலை வழக்கில் பரோல் வழங்கினால் ரவிச்சந்திரனுக்கு உயிருக்கு ஆபத்து உள்ளது. ரவிச்சந்திரன் சொந்த ஊரில் சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com