பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்துக்கு எதிரான வழக்கில் 22ஆம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனத் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்தத் தேர்வை ரத்து செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் அறிவித்தது.
இந்நிலையில் தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சிவகங்கையைச் சேர்ந்த இளமதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவில், 1,33,567 பேர் தேர்வு எழுதியதில் 200 பேரின் விடைத்தாளில் முறைகேடு நடந்துள்ளது.
200 பேருக்காக அனைவரையும் தண்டிப்பது ஏற்கக் கூடியதல்ல. எனவே எழுத்துத்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தன்னை விரிவுரையாளராக நியக்க வேண்டும் என கோரியிருந்தார்.
மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை வரும் 22ம் தேதிக்குள் பதிலளிக்க ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், பள்ளிக் கல்வித்துறை செயலருக்கு உத்தரவிட்டது.