சென்னை: வருமானம் குறைவு என்பதால் தமிழகத்தில் மூன்று ரயில் நிலையங்கள் மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும், வருமானம் இல்லாமல் இருப்பதாலும் ரயில்வே நிலையங்கள் தொடர்ச்சியாக மூடப்படடு வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் மூன்று மூன்று ரயில் நிலையங்கள் மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி ராசிபுரம் - கலங்காணி இடையே உள்ள புதுச்சத்திரம் ரயில்வே நிலையம், நாமக்கல்-மோகனூர் இடையே உள்ள வட்டிவாடி ரயில்வே நிலையம் மற்றும் கரூர் - திருச்சி இடையே அயன் முத்தரசநல்லூர் அருகே உள்ள மேக்குடி ரயில்வே நிலையம் ஆகிய மூன்று நிலையங்களும் வரும் 19- தேதி முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.