ஆத்தூர்: இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என்று எண்ணியவர்களின் எண்ணம் கானல் நீராகி விட்டது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் அ.தி.மு.க. கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டார். மணமக்களை வாழ்த்தி விட்டு வெளியே வந்தவரிடம் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினார். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து திட்டங்களும் ஜெயலலிதா ஆட்சியில் இருந்து தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என்று எண்ணியவர்களின் எண்ணம் எல்லாம் கானல் நீராகி விட்டது. எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனங்களை மீறி கடந்த ஓராண்டு காலம் சிறப்பான ஆட்சி நடந்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.