தூத்துக்குடி வஉசி துறைமுகம் நிலக்கரி இறக்குமதியில் புதிய சாதனை

நிலக்கரி இறக்குமதி செய்வதில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் திங்கள்கிழமை புதிய சாதனை படைத்தது.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் திங்கள்கிழமை நிலக்கரி இறக்குமதி செய்யும் எம்.வி. ஸீ கோப் கப்பல்.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் திங்கள்கிழமை நிலக்கரி இறக்குமதி செய்யும் எம்.வி. ஸீ கோப் கப்பல்.

நிலக்கரி இறக்குமதி செய்வதில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் திங்கள்கிழமை புதிய சாதனை படைத்தது.
இத்துறைமுகத்தின் 9ஆவது சரக்குத் தளத்தில் எம்.வி. ஸீ கோப் என்ற கப்பலிலிருந்து திங்கள்கிழமை 24 மணி நேரத்துக்குள் 45,396 மெட்ரிக் டன் நிலக்கரியைக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு, 2014 ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி 41,376 மெட்ரிக் டன் நிலக்கரி கையாண்டதே சாதனையாக இருந்தது.
இந்நிலையில், இப்புதிய சாதனை படைக்க உதவியாக இருந்த அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவிப்பதுடன், வருங்காலங்களில் பல சாதனைகளைப் தொடர்ந்து புரிய ஒத்துழைக்க வேண்டும் என, துறைமுகப் பொறுப்புக் கழக தலைவர் ஐ. ஜெயக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com