சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரும் 2018-19 கல்வியாண்டு முதல் ஆன்-லைன் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இதற்கு பல்கலைக்கழக ஆட்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
நாடு முழுவதும் ஆன்-லைன் படிப்புகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில், சென்னைப் பல்கலைக்கழகமும் தொலைநிலைப் படிப்புகளை ஆன்-லைனில் வழங்க முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக பட்டயப் படிப்புகள், சான்றிதழ் படிப்புகள் வழங்கப்பட உள்ளன. இதற்கென புதிய வழிகாட்டுதல்களையும் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது
இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்சிக் குழு இந்த வழிகாட்டுதலுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன் மூலம், வருகிற 2018-19 கல்வியாண்டு முதல் இந்த ஆன்-லைன் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது என பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.