பதவி உயர்வு பெற்ற 12 டி.ஐ.ஜி.கள் புதிய பணியிடங்களில் நியமனம்: 6 டி.ஐ.ஜி.கள் பணியிட மாற்றம்

தமிழக காவல்துறையில் பதவி உயர்வு பெற்ற 12 டி.ஐ.ஜி.கள் புதிய பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர். மேலும் 6 டி.ஐ.ஜி.கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக காவல்துறையில் பதவி உயர்வு பெற்ற 12 டி.ஐ.ஜி.கள் புதிய பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர். மேலும் 6 டி.ஐ.ஜி.கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக காவல்துறையில் 12 எஸ்.பி.க்கள், டி.ஐ.ஜி.க்களாக கடந்த வாரம் பதவி உயர்வு செய்யப்பட்டனர். இவர்கள் புதிய பணியிடங்களில் நியமிக்கப்படாமல் இருந்தனர். இந்நிலையில் இவர்கள் 12 பேரையும் புதிய பணியிடங்களில் நியமனம் செய்து, தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இது தொடர்பாக தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன்மார்டி வெளியிட்ட உத்தரவு (பழைய பணியிடம் அடைப்புக்குள்):
கே.ஏ.செந்தில்வேலன்-
டி.ஐ.ஜி. மத்திய உள்துறை (எஸ்.பி.மத்திய உள்துறை)
அவினாஷ்குமார்-மத்திய உளவுத் துறை டி.ஐ.ஜி. (மத்திய உளவுத் துறை நாக்பூர் எஸ்.பி.)
அஸ்ராகர்க்-டி.ஐ.ஜி. தில்லி சிபிஐ (தில்லி சிபிஐ தலைமையிட எஸ்.பி.)
ஏ.ஜி.பாபு-சென்னை பெருநகர காவல்துறை தலைமையிட இணை ஆணையர் (சிபிசிஐடி சைபர் குற்றப் பிரிவு எஸ்.பி.)
பி.கே.செந்தில்குமாரி-தமிழக காவல் துறை நிர்வாகப் பிரிவு டி.ஐ.ஜி. (சென்னை வணிக குற்றப் புலனாய்வு பிரிவு எஸ்.பி.)
ஏ.டி.துரைக்குமார்-சிபிஐ டி.ஐ.ஜி. (சென்னை சிபிஐ பொருளாதார குற்றப் பிரிவு எஸ்.பி.)
சி.மகேஷ்வரி-சென்னை காவல்துறையின் தெற்கு மண்டல இணை ஆணையர் (சென்னை காவல்துறை போக்குவரத்து பிரிவு துணை ஆணையர்)
என்.இசட்.ஆசியம்மாள்-சென்னை காவலர் பயிற்சி கல்லூரி டி.ஐ.ஜி. (சென்னை சிபிசிஐடி எஸ்.பி.)
ஏ.ராதிகா- சென்னை லஞ்ச ஒழிப்புப் பிரிவு டி.ஐ.ஜி. (லஞ்ச ஒழிப்புப் பிரிவு எஸ்.பி.)
ஆர்.லலிதாலட்சுமி-திருச்சிராப்பள்ளி சரக டி.ஐ.ஜி. (சென்னை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.)
எம்.வி.ஜெயகௌரி-சென்னை ஆயுதப் படை டி.ஐ.ஜி. (சென்னை மெட்ரோ ரயில் தலைமை பாதுகாப்பு அதிகாரி)
என்.காமினி-ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. (ஆவடி தமிழ்நாடு சிறப்புக் காவல்படை இரண்டாவது அணி கமாண்டன்ட்)
பணியிட மாற்றம் செய்யப்பட்ட 6 டி.ஐ.ஜி.க்கள் (பழைய பணியிடம் அடைப்புக்குள்):
கே.ஜோஷி நிர்மல்குமார் - திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.(தமிழக உளவுப் பிரிவு டி.ஐ.ஜி.)
ஜி.கார்த்திகேயன்-கோயம்புத்தூர் சரக டி.ஐ.ஜி. (திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.)
டி.எஸ்.அன்பு-சென்னை பெருநகர காவல்துறை கிழக்கு மண்டல இணை ஆணையர் (சென்னை பெருநகர காவல்துறை தெற்கு மண்டல இணை ஆணையர்)
கே.பவானீஸ்வரி-தமிழக கடலோர பாதுகாப்பு குழும சென்னை டி.ஐ.ஜி. (திருச்சிராப்பள்ளி சரக டி.ஐ.ஜி.)
சந்தோஷ்குமார்-விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. (சென்னை காவல்துறையின் கிழக்கு மண்டல இணை ஆணையர்)
ஜெ.பாஸ்கரன்-சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு டி.ஐ.ஜி. (சிறைத்துறை வேலூர் சரக டி.ஐ.ஜி.) என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பார்கள் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com