பெரியபாண்டியன் சுடப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சென்னை கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் 6 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி கொளத்தூர் காவல் ஆய்வாளராக இருந்த முனிசேகர் தெற்கு மண்டலத்துக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
ராஜஸ்தானில் பதுங்கியிருந்த கொள்ளையன் நாதுராமை பிடிக்கச் சென்றபோது, ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். பெரியபாண்டியனை கொள்ளையர்கள் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியான நிலையில், அவரை தவறுதலாக ஆய்வாளர் முனிசேகர் சுட்டுக் கொன்றது பின்னர் தெரியவந்தது.