சர்க்கரை ஆலைகள் முன்பு தேமுதிக நாளை போராட்டம்

விவசாயிகளின் நிலுவைத் தொகை வழங்கப்படாததைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் சர்க்கரை ஆலைகள் முன்பு தேமுதிக சார்பில் வியாழக்கிழமை (ஜன.4) முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

விவசாயிகளின் நிலுவைத் தொகை வழங்கப்படாததைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் சர்க்கரை ஆலைகள் முன்பு தேமுதிக சார்பில் வியாழக்கிழமை (ஜன.4) முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து தேமுதிக வெளியிட்ட அறிவிப்பு:
விவசாயிகளுக்கு கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள சர்க்கரை ஆலைகள் முன்பாக தேமுதிக சார்பில் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. 
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் உள்ள சர்க்கரை ஆலை முன்பாக, பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com