சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் விசாரணை ஆணையத்தின் முன்பு, மருத்துவர் சுதா சேஷய்யன் ஆஜராகியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுசாமி தலைமையிலான ஆணையத்தின் முன்பு, இன்று காலை மருத்துவர் சுதா சேஷய்யன் ஆஜரானார்.
ஜெயலலிதா மரணம் அடைந்த போது, அவரது உடலை எம்பார்மிங் செய்த குழுவில் மருத்துவர் சுதா சேஷய்யன் இடம்பெற்றிருந்தார். இதன் அடிப்படையில், அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.