பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 துணைத்தேர்வு: இன்று அசல் மதிப்பெண் சான்றிதழ்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ் வெள்ளிக்கிழமை (ஜன.5) வழங்கப்படவுள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ் வெள்ளிக்கிழமை (ஜன.5) வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து அரசுத்தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு அக்.31- ஆம் தேதியிலிருந்தும், பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு அக்.26-ஆம் தேதியிலிருந்தும் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வர்கள் தாங்களே ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த மார்ச் 2016-ஆம் பருவம் முதல் நிரந்தர பதிவெண் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வெழுதி, அதில் தேர்ச்சி பெறாமல் செப்டம்பர், அக்டோபர் 2017-இல் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகளை எழுதி அனைத்துப் பாடங்களிலும் 
தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழ்களை வெள்ளிக்கிழமை (ஜன.5) காலை 10 மணி முதல் தேர்வர்கள் அவர்கள் எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com