முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' தேர்வு, தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 7) நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளங்நிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் 'நீட்' தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு முதுநிலை மருத்துவ இடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரை நடைபெற்றது.
இதற்கான தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 129 மையங்களில் நடைபெறும் இந்தத் தேர்வை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மேகொள்ளப்பட்டுள்ளன.