முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் முன், மருத்துவர் சுவாமிநாதன் இன்று ஆஜராகியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக், தீபாவின் கணவர் மாதவன்,தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகன ராவ் உள்ளிட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
இந்நிலையில் விசாரணை ஆணையம் முன் இருதய நிபுணர் மருத்துவர் சுவாமிநாதன் இன்று ஆஜராகியுள்ளார். ஜெயலலிதாவுக்கு இதயம் செயலிழந்த போது அவருக்கு சிகிச்சை அளித்தவர் தான் மருத்துவர் சுவாமிநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.